Monday, October 28, 2013

 
தொழிற்சங்க வாதி, பொதுவுடைமையாளர், சிந்தனைச் சிறகுகைளை விரிப்பவர், நூல்களின் அடுக்குகளே சொத்தாகக் கொண்டவர், கோவிலிலும் குருக்கள்.

தவத்திரு சரவணபவானந்தக் குருக்கள் கொழும்பில் வணிகத் தொழிலாளர் சங்கத்தின் பாலா தம்புவின் மாணவர். இப்பொழுது சுவிற்சர்லாந்தில் சூரிச்சின் இன்வில் பகுதியில் அருள்மிகு விட்டுணு துர்க்கை அம்மன் கோயில் குருக்கள்.

அக்கோயிலில் கோயிலுக்கு வரும் அடியவர்களே பூசனையில் பங்ககேற்கலாம். தமிழ்ப் பாடல்களை அவர்களே கூட்டாகப் பாடிப் பாடிப் பூசனையில் ஈடுபடலாம். இசையோடும் கருவிகளைடும் சேர்ந்து பாடி வழிகாட்டுபவர் தவத்திரு சரவணபவானந்தக் குருக்கள். பொதுவுடைமையும் சமயநெறியும் தரும் பயன்மிக்க கலவை.

25.10.2013 மாலை சிவத்தமிழ்ச்செல்வர் செந்தில்நாதன் என்னை அக்கோவிலுக்கு அழைத்துச் சென்றார்.

பன்னிரு திருமுறைகளுள் தோய்ந்து திளைக்கும் செந்தில்நாதனார் வழிவழி அடியவர். யாழ்ப்பாணம், காரைநகரில் அவர் தந்தையார், பாட்டனார் எனத் திருமுறைக்குள் தோய்ந்த அவர் முன்னோரின் பட்டியல் நீண்டது.

தேவாரத் தளப் பரப்புரைக்காகச் சென்றேன். படங்கள் பார்க்க. 

0 comments:

Post a Comment