Saturday, October 5, 2013





இறைவன் நடராஜரைத் தொழும் பக்தர்களுக்கும் , அகத்தியர் மற்றும் திருமூலர் போன்ற சித்தர்களுக்கும் திருக்குற்றாலம் தனியானதொரு மகிழ்ச்சியைத் தரும். திருக்குற்றாலத்தில் அமைந்துள்ள  சித்திரசபை ஓவியங்கள், நடராஜரது அண்ட நடன நிகழ்ச்சித் தத்துவம்  நிகழ்ச்சிக்கு  ஒரு வாய் பேசாத சாட்சி மற்றும் தெய்வீக நாடகம் என்று பார்வையாளர்களைக் கவரும் வண்ணம், சுவர்களில் காட்சிகள் வரையப்பட்டிருக்கின்றன..

மீண்டும் மீண்டும் ஓவியங்களைப் பாருங்கள் . நிறங்கள் வளைவுகள் மற்றும் மாறாத வண்ணங்களையும் பாருங்கள் நிச்சயமாக மானுடர்களால் வரையப்பட்ட ஓவியங்கள்  என்று கருத இயலாது. இப்படிப்பட்ட நிறம் , வீரியம் மற்றும் நுட்பமான உணர்வுகளை ஐக்கியப்படுத்தி மனிதர்களால் பேசும் சித்திரங்களைத் தீட்டியிருக்க இயலாது என்ற வியப்பும் மகிழ்வும் ஒருசேர உள்ளத்தில் தோன்றுவதை நம்மால் தடுத்து நிறுத்த இயலாது.



திருக்குற்றாலம் சித்திர சபை தமிழ்நாட்டில் ஐந்து பிரபலமான சபைகளில்  

ஒன்றாகும் சிதம்பரம் இருப்பது பொற்சபை, மதுரையில் உள்ளது வெள்ளி 

சபை.   திருநெல்வேலி, இராஜவல்லிபுரத்தை அடுத்துள்ள செப்பறை தாமிர 

சபை.  பலர் நெல்லையப்பரோடு நிறுத்திவிடுகின்றனர். செப்பறையே 

மெய்யான தாமிரசபை. நெல்லையில் நடராஜர் ஆடுவது ஆனந்தக் கூத்து.

 திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் உள்ளது இரத்தின 

சபை ஆகும். திருக்குற்றாலத்தில் உள்ள சித்திர சபை  கலை முற்றிலும் 

ஓவிய வடிவங்களைக் கொண்டு ஒளிர்கின்றது

பராக்கிரம பாண்டியன் மூலம் 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்ட சித்திர சபை நாட்டுப்புறக் கலைகளைப் பிரதிபலிக்கும் வண்ணம் அமைந்துள்ளது  அது  பழந் தமிழர்களின் புகழ்பெற்ற ஓவியக் கலையின் மேதைமைகளுக்குப் போதிய சான்றுகளாகத் திகழ்கின்றன. மற்றும் நம் முன்னோர்கள் அழகியல் உணர்வுகளையும் வெளிக்கொணர்கின்றன.
அஜந்தா-எல்லோரா என்று சுற்றுலா செல்வோர் சித்திரசபையையும் காண்பதைக் கடமையாகக் கொண்டால்தான் தமிழரின் அருமை புரியும்.

பேரருவி, சிற்றருவி, ஐந்தருவி சாலைகள், , இந்த அழகான மண்டபம் ,. சித்திரசபைக்  கட்டமைப்பு, கேரளக் கோயில்களின் தோற்றங்களைப் பிரதிபலிக்கும் பொதுவான பல விஷயங்கள் உள்ளன . சபையின் நான்கு சுவர்களிலும் தெய்வங்கள் , பக்தர்கள் , புராணக் கதைகள் , புராண நிகழ்வுகள் என பல்வேறு வகையான ஓவியங்கள் முன்னும் பின்னுமாக ஒரு ஒழுங்கு முறையில் சுவர்களில் அலங்கரிக்கப்பட்டுள்ளன..

சிவபெருமானின் 64 திருவிளையாடல்களும் முறையாகச் சித்திரங்களில் காட்சியளிக்கின்றன. சித்திர சபையில் வரையப்பட்டுள்ள கடவுள் நடராஜர் ஓவியம் உயிர்பெறெழுந்து நம் முன் நடனமாடுவதுபோன்ற உணர்வைத் தோற்றுவிக்கின்றது. இந்த இடத்தில் ஓர் செவி வழிச் செய்தியையும் குறிப்பிடவேண்டும். ஐந்து சபைகளிலும் உள்ள நடராஜர் திருவுருவங்க்களைச் வடிவமைத்த பெருந்தச்சன் ( ஸ்தபதி ) ஒருவரே ஆகும் என்பதே அந்தத் தகவல்.  ஆண்டாண்டுக் காலமாக ஸ்தபதி என்ற சொல்லையே பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் பெருந்தச்சன் என்று குறிப்பிடுதலே சரியானதாகும்.

 இறைவனின் இரக்கமுள்ள முகத்தில் தெய்வீக அருள் ததும்பப்  பார்க்கும் பொழுதுதான்" மனித்தப் பிறவியும்  வேண்டுவதே இந்த மாநிலத்தே" . என்று பாட்ட்டின் உண்மைப் பொருளை உணர முடியும். இஇஇந்தத் தெய்வீக உணர்வினை பெரும்பாலான நடராஜர் சந்நிதிகளில் நன்கு உணர இயலும்.
 விஷ்ணுவின் 10 அவதாரங்களையும் இங்கே ஓவியங்களாக உள்ளன. மேலும் சைவ மற்றும் வைஷ்ணவ ஒருமையையை வலியுறுத்துகின்றன என்றும் கொள்லலாம். திருக்குற்றாலநாதர் திருக்கோயில், வைஷ்ணவக் கோயிலாக இருந்து சைவத்திற்கு மாற்றப்பட்டது என்று கூறப்படுவதை ஈண்டு நினைவு கூறலாம்..

துல்லியமாக கணிதவியல் நுட்பத்துடன் வரையப்பட்ட இலங்கை சக்ரா போன்ற தந்திரக் குறியீடுகள் சித்திரசபை மண்டபத்திற்கு மேலும் அழகு சேர்க்க்கின்றன. முருகன் மற்றும் வள்ளி  தெய்வானை திருமணக் காட்சிகள், மற்றும் மீனாட்சி கோயிலின் சுந்தரேஸ்வரர் என்று தெளிவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. பிரம்மா தாமரைக் கண்களுடைய விஷ்ணு அல்லது அனந்தபத்மநாபனின் தொப்புளில் இருந்து பிறப்பு எடுத்து   தோன்றும் காட்சியும் அனைவரையும் ஈர்க்கும் புகழ்பெற்ற  பதினாறு  வடிவங்களில் விநாயகா மண்டபத்தின் மேல் அலங்கரிக்கிறது .

ஒரு முதலை இரும்பு பிடியில் சிக்கி ஒரு யானை விஷ்ணுவின் அருளால் மோட்சம் பெற்ற புராண வரலாற்றுக் காட்சியும் இடம்பெற்றுள்ளது. பாகவதத்தின் கதைகள் ஆங்காங்கே வரையப்பட்டுள்ளன.
  .
கண்ணுக்கினிய அழகானவர்கள் ஒரு முக்கிய இடத்தை கண்டுபிடிக்க அதன்  பொங்குமாக்கடலில் விழுந்து துள்ளி எழுந்து  நீர்த்திவலைகளுடன் கூடிய  வேகத்துடன்  நீர்வீழ்ச்சியாகக் கீழே வருகின்ற திருக்குற்றாலப் பேரருவி நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளது. வீரபத்திரன். காலிங்க்கநாதர் போன்ற சிறு தெய்வங்களும் வெளிப்புறச் சுவரில் வரையப்பட்டுள்ளன.வனப்பு மிகு வனிதையரின் சுதை ஓவியங்கள் சித்திரசபைக்கு மென்மேலும் மெருகூட்டுகின்றன.

ஓவியங்களின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் அவை முற்றிலும் மூலிகைச் சாறுகள் கொண்டு செய்யப்பட்டுள்ளன என்பதே ஆகும்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் G.நடராஜப்பெருமாள் என்னும் அன்பர் 23-12-2012-ல் ஆங்கிலத்தில் எழுதியிருந்த கட்டுரையின் தமிழ் மொழியாக்கமாகும்.                                                                                                          

600 ஆண்டுகளுக்குப்பின் புதுபொலிவு பெற்ற சித்திரசபை -இது அண்மையில்
அனைத்துப் பத்திரிகைகளிலும் வந்த தலைப்புச் செய்தி. இதனை எளிதாக ஒரு நிரூபர் சேகரித்து விடலாம். ஆனால் எல்லோராலும் வெளிப்படுத்தப் படாததோர்  உண்மை நிகழ்வைக் கேட்கும் நல்வாய்ப்பு எமக்குக் கிடைத்தது.

உண்மை நிகழ்வின் சிறப்பு 

 இந்துசமய அறநிலையத்துறையில் இணை இயக்குநராகப் பணியாற்றி வருபவர் ஹரிப்பிரியா. இவர் சித்திரசபையினைப் பார்வையிட வருகின்றார்.

அப்போது அங்கு பணியாற்றும் A.சுடலைமுத்து என்பவர், அதிகாரியிடம் சித்திரசபையைச் சீரமைத்திட தனியார் ஒருவரிடமிருந்து உதவி கிடைக்கும் என்று உறுதிப்டக் கூறுகின்றார். அதிகாரி, அது எப்படி என்று வியப்புடன் வினவ எல்லாம் சித்தர் அருள் என்று விடையிறுக்கின்றார்.

சரியாக 22 நாட்கள் கழித்து கரூரிலிருந்து ஒரு செல்வந்தர் தம் குடும்பத்தாருடன் வருகைதந்து சித்திரசபையைக் கண்டு களிக்கின்றார். அப்போதைய நிலை சித்திரங்கள் ஒளி இழந்தும், பல இடங்களில் சுவரினின்றும் உதிர்ந்தும் காணப்பட்டன.

கரூரிலிருந்து வந்தவர் V.K.தங்கவேல் என்பவர் ஓர் மில்லின் உரிமையாளர்
அவரிடம், காவலாளி A.சுடலைமுத்து, திருக்குற்றாலத் தல வரலாற்றையும், சித்திரசபையின் அருமை பெருமைகளையும், வழிவழியாக வந்த செவிவழிச் செய்திகளையும் விரிவாக இரண்டு மணிநேரத்திற்கு மேல்  எடுத்துக்கூறிவிட்டு, தாங்கள் சித்திரசபையைப் பொலிவு பெறச் செய்வது இறைவனின் சித்தம் என்று கூறுகின்றார்.

"அதிசயங்கள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன" என்று அடிக்கடி எழுதவும், பேசவும் செய்வார், நெல்லை மாவட்டம், இராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த சாகித்திய அகடமி விருது பெற்ற ,தம் வாழ்க்கையே இதமிழிலக்கியத்திற்கு அர்ப்பணித்துத் திருமணம் கூடச் செய்து கொள்ளாத பிரபலமான நம் நினைவில் வாழும் எழுத்தாளர் வல்லிக்கண்ணன்.

ஆம் அந்த அதிசயம் அங்கே நிகழ்ந்தது. எவ்வளவு செலவாகும் என்று 

கொடுப்பவர் கேட்கவில்லை. யாரிடம் பணம் கொடுக்க வேண்டும் என்பதே 

அவரது அடுத்த வினா.  நிர்வாக அதிகாரி கஜங்காத்தபெருமாள் 

,அறங்காவலர் குழுத்தலைவர் தங்கம் பலவேசம், அறங்காவலர்கள் 

வீரபாண்டியன், முரளி ஆகியோர் வரவழைக்கப்பட்டனர். சித்திர சபையைச் 

சீரமைத்திட முன்தொகை வழங்கப்பட்டது. வேலை முடிய முடிய பகுதி 

பகுதியாகத் தொய்வின்றிக் கரூர் அன்பர்களிடமிருந்து 

45 லட்சம் ரூபாய் வரை எத்தகைய தடங்கலுமின்றி வந்து சேர்ந்தது. 

சித்திரசபையின் குடமுழுக்கும் செவ்வனே நடந்தேறியது. -16-09-2013-ல்.

இங்கு குறிப்பிட வேண்டியதொரு முக்கியமான தகவல் வருமாறு. நமது தலைநகராம் தில்லியில் இந்திய  மூலிகை ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று இயங்கி வருகின்றது. அங்கிருந்து வந்தோரே ஆர்வமுடன் இயற்கை மூலிகைச் சாற்றினைக் கொண்டே, நம் மூதாதையர்கள் வரைந்திருந்த சித்திரங்களின் மீது அச்சரம் பிசகாமல் கோடிழுத்து வண்ணந் தீட்டிப் புதுப்பொலிவை ஏற்படுத்தியுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் இந்தி பேசுபவர்களாகவே இருந்திருக்கக் கூடும். மெய்யான கலை இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்தல்லவா ?

சித்திரசபைச் சீரமைப்பது தனியார் நன்கொடைகளைக் கொண்டே நிகழும் என்று முன்னதாகவே அறுதியிட்டுச் சொன்ன A.சுடலைமுத்துவையும் நாம் ஒரு சித்தராகவே பார்க்கின்றோம். ஏனெனில், மனிதர்களைத் தெய்வமாக வழிபடுவது சித்தர் வழிபாட்டின் தொடர்ச்சிதானே.

உண்மையை உள்ளது உள்ளபடி அறிய திருநெல்வேலி மாவ்ட்டம், தென்காசியை அடுத்துள்ள திருக்குற்றாலத்தில் உள்ள சித்திர சபைக்கு வாருங்கள்.  உள் நுழையுமுன் இடதுபுறம் காணப்படும் கல்வெட்டினைக் காணுங்கள்.

கல்வெட்டில் இடம்பெற்றுள்ள  நற்றொண்டாற்றியோர் பெயர்கள் 

01. V.K.தங்கவேல் 

02. எஸ். ஜெயராம்

03. எஸ். சிவசண்முகம்

04.  த. பாலச்சந்திரன்

முகவரி :- 52, 5-வது குறுக்குத் தெரு, கரூர்- 679 002 

பயன்கருதாமற் சாதாரண காவலாளியின் வேண்டுகோளை ஏற்று 

நன்கொடை வழங்கி, 600 ஆண்டுகாலத் தொன்மை வாய்ந்த சித்திரசபையப் 

புதுப்பொலிவு பெறச் செய்த கரூர் அன்பர்களுக்கும், உடன் பணியாற்றிய 

டில்லி ஓவிய விற்பன்னர்களுக்கும், துணை நின்ற ஒவ்வொருவருக்கும் 

தனித்தனியாகவும் மொத்தமாகவும் வலைபதிவர்கள் சார்பில் நெஞ்சார்ந்த 

நன்றிகளும், வணக்கங்களும், வாழ்த்துக்களும் !   .

சித்திர சபையில் இன்னுமொரு சிறப்பம்சம் :-

செந்தமிழ் நாட்டுத் திருக்கோயில்களின் தூண்களில் யாளிகள்   
( யானை + சிங்கம்  ) மிருக உருவங்க்கள் இருக்கும். அதன் வாய்க்குள் கோழிமுட்டை வடிவிலான உருண்டைக் கற்கள் இருக்கும். சிலைகளைச் செய்து முடித்த பின்தான் அதன் வாய்க்குள் அந்தவகைக் கற்களைச் சிற்பி உள்ளே போட்டுள்ளதாக முதியோர் கூறக் கேள்வி. 

அந்தக் கற்களை எதோ ஒரு நிலையில் வெளியெ எடுத்துவிடலாம். ஆனால், இன்றளவும் எடுத்தவர் யாரும் இல்லை. ஆனால், அண்மையில் சங்கரன்கோயில் சென்றிருந்தபோது கோமதி அம்மன் சந்நிதிக்கு வெளிப்புறமுள்ள யாளிகளின் வாய்க்குள் முட்டை வடிவிலான கற்கள் இல்லவே இல்லை. காணாமற்போன கற்களைக் கண்டுபிடிப்பதற்கே ஓர் ஆய்வு நடத்திடல் வேண்டும்.

ஏன் இந்த யாளி விஷயம் ? சித்திரசபையினை உருவாக்குவதில் பயன்படுத்தப்பட்ட அளவுகோலை, வேலைகள் எல்லாம் முற்றுப்பெற்றவுடன் கூண்டொன்றிற்குள்  சிற்பி போட்டு விட்டார். அந்த அளவுகோலை  கூண்டிலிருந்து வெளியே எடுக்க முற்பட்டால் அது இயலாத காரியமாக உள்ளது. 25% அல்லது 50% அல்லது 75% கூட அளவுகோல் வெளியே எடுக்க முடிகிறதாம். இன்றளவும் யாராலும் முழுமையாக எடுக்க முடியவில்லையாம் . அடுத்தமுறை செல்லும்பொழுது முயன்று பார்க்க வேண்டும்.

நீங்களும்தான்  சிற்பி பயன்படுத்திய அளவுகோலை வெளியே எடுக்க முயற்சி செய்யுங்களேன்?

0 comments:

Post a Comment