திருச்செந்தூர் கோவிலுக்கு திருவனந்தபுரம்
பக்தர்கள் பறக்கும் காவடி எடுத்து வேண்டுதல்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பக்தர்கள் பறக்கும் காவடி எடுத்து வழிபட்டனர்.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பக்தர்கள் ஆண்டு தோறும் திருச்செந்தூர் கோவிலுக்கு காவடி எடுத்து வந்து வழிபடுவது வழக்கம். 15-வது ஆண்டை முன்னிட்டு திருவனந்தபுரத்தைச் சேர்ந்த குருசாமி சோமன் சாமிகள் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவனந்தபுரம் ஸ்ரீ கண்டேஸ்வரர் கோவிலில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை பாதயாத்திரையாக புறப்பட்டு, நெய்யாற்றங்கரைக்கு வந்து, அங்கிருந்து திருச்செந்தூருக்கு வந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலையில் திருச்செந்தூர் தெப்பக்குளம் அருகிலுள்ள விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பறக்கும்காவடி, சூரியக்காவடி எடுத்து மேலரதவீதி, வடக்குரதவீதி, கீழரதவீதி, சன்னதித்தெரு வழியாக திருக்கோவிலுக்கு வந்து வழிபட்டனர். திங்கட்கிழமை காலை பக்தர்கள் வேல்காவடி எடுத்தும், அலகு குத்தி பால்குடம் எடுத்து சுவாமி தரிசனம் செய்ய உள்ளனர். இதே போல் செவ்வாய்க்கிழமையன்று மாலை பக்தர்கள் திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் அக்னி காவடி எடுத்தும், பூக்குழி இறங்கியும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற உள்ளனர். நிகழ்ச்சியில் பக்தர்கள்பலர்கலந்துகொண்டனர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பக்தர்கள் பறக்கும் காவடி எடுத்து வழிபட்டனர்.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பக்தர்கள் ஆண்டு தோறும் திருச்செந்தூர் கோவிலுக்கு காவடி எடுத்து வந்து வழிபடுவது வழக்கம். 15-வது ஆண்டை முன்னிட்டு திருவனந்தபுரத்தைச் சேர்ந்த குருசாமி சோமன் சாமிகள் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவனந்தபுரம் ஸ்ரீ கண்டேஸ்வரர் கோவிலில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை பாதயாத்திரையாக புறப்பட்டு, நெய்யாற்றங்கரைக்கு வந்து, அங்கிருந்து திருச்செந்தூருக்கு வந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலையில் திருச்செந்தூர் தெப்பக்குளம் அருகிலுள்ள விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பறக்கும்காவடி, சூரியக்காவடி எடுத்து மேலரதவீதி, வடக்குரதவீதி, கீழரதவீதி, சன்னதித்தெரு வழியாக திருக்கோவிலுக்கு வந்து வழிபட்டனர். திங்கட்கிழமை காலை பக்தர்கள் வேல்காவடி எடுத்தும், அலகு குத்தி பால்குடம் எடுத்து சுவாமி தரிசனம் செய்ய உள்ளனர். இதே போல் செவ்வாய்க்கிழமையன்று மாலை பக்தர்கள் திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் அக்னி காவடி எடுத்தும், பூக்குழி இறங்கியும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற உள்ளனர். நிகழ்ச்சியில் பக்தர்கள்பலர்கலந்துகொண்டனர்.
தினமணி
0 comments:
Post a Comment